பல்லவி
ஸம்ஸாருலைதேனேமய்யா ஸி1கி2
பிஞ்சா2வதம்ஸுடெ3து3டனுண்ட3க3
அனுபல்லவி
ஹிம்ஸாது3லெல்ல ரோஸி 1ஹம்ஸாது3ல கூடி3
ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனே ப்ரொத்3து3
கம்ஸாரினி நம்முவாரு (ஸம்)
சரணம்
சரணம் 1
ஞான வைராக்3யமுலு ஹீனமைனட்டி ப4வ
கானனமுன திருகு3 2மானவுலு ஸதா3
2த்4யான யோக3 யுதுலை நீ நாமமு பல்குசு
நானா 3கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு (ஸம்)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸம்ஸாருலு/-ஐதே/-ஏமி/-அய்யா/ ஸி1கி2/
இல்லறத்தினர்/ ஆனால்/ என்ன/ அய்யா/ மயில்/
பிஞ்ச2/-அவதம்ஸுடு3/-எது3டனு/-உண்ட3க3/
பீலி/ யணிவோன்/ எதிரில்/ இருக்க/
அனுபல்லவி
ஹிம்ஸ/-ஆது3லு/-எல்ல/ ரோஸி/ ஹம்ஸாது3ல/ கூடி3/
இம்சை/ ஆகிய/ யாவும்/ வெறுத்து/ முற்றுமுணர்ந்தோரை/ கூடி/
ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனு/-ஏ ப்ரொத்3து3/
(இறைவனின்) புகழ் பாடிக்கொண்டு/ எவ்வமயமும்/
கம்ஸ/-அரினி/ நம்முவாரு/ (ஸம்)
கஞ்சனை/ வதைத்தோனை/ நம்புவோர்/ இல்லறத்தினர்...
சரணம்
சரணம் 1
ஞான/ வைராக்3யமுலு/ ஹீனமு-ஐன/-அட்டி/ ப4வ/
ஞானம்/ வைராக்கியம் ஆகியவை/ யற்ற/ அத்தகைய/ பிறவி/
கானனமுன/ திருகு3/ மானவுலு/ ஸதா3/
காட்டினில்/ திரியும்/ மனிதர்கள்/ எவ்வமயமும்/
த்4யான/ யோக3/ யுதுலை/ நீ/ நாமமு/ பல்குசு/
தியானம்/ யோகம்/ உடையோராய்/ உனது/ பெயர்/ உரைத்துக்கொண்டு/
நானா/ கர்ம/ ப2லமு/ தா3னமு ஸேயுவாரு/ (ஸம்)
பற்பல/ கருமங்களின்/ பயன்களை/ (இறைவனுக்கு) அர்ப்பணிப்போர்/ இல்லறத்தினர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மானவுலு - யோக3 யுதுலை : மானவுடு3 - யோக3 யுதுடை3 : இந்த கீர்த்தனையில், பிற சொற்கள் யாவுமே பன்மையிலிருப்பதனால், 'மானவுலு - யோக3 யுதுலை' என்பது தான் பொருந்தும்.
4 - ஸ்ரீ ராக3முன - ராக3முன.
Top
மேற்கோள்கள்
1 - ஹம்ஸாது3ல - முற்றுமுணர்ந்தோர் - 'ஹம்ஸ' என்பது 'அஹம்ஸ' (நான் அவனே) என்பதன் சுருக்கமாகும். சதாசிவ பிரம்மேந்திரர், தமது 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற கீர்த்தனையில், 'ஹம்ஸஸ்-ஸோஹம்-ஸோஹம்-ஹம்ஸமிதி' என்று கூறியுள்ளார்.
3 - கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு - கருமத்தின் பயன்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோர். இது குறித்து, கீதையில் (5-வது அத்தியாயம், 12-வது செய்யுள்), கண்ணன் கூறியது -
"யோக நெறி நிற்பவன், கருமத்தின் பயனைத் துறந்து, உறுதியான மனவமைதி அடைகின்றான்.
அங்ஙனமல்லாதவன், இச்சைகள் காரணமாக, பயனில் ஆசைகொண்டு, தளைக்குள்ளாகின்றான்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
2 - த்4யான யோக3 - இதற்கு, தியானம், யோகம் என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், 'தியான யோகம்' என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
4 - ஸ்ரீ ராக3முன - சில புத்தகங்களில், இது, 'ஸ்ரீ ராகம்' எனும் ராகம் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த கீர்த்தனையே அந்த ராகத்தினில் இல்லாததனால், இது ஒரு குறிப்பிட்ட ராகத்தினைக் குறிக்குமா என்று, இசை வல்லுனர்கள்தான் விளக்க இயலும்.
மயிற்பீலி யணிவோன் - கண்ணன்
கஞ்சனை வதைத்தோன் - கண்ணன்
Top